search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக பிரமுகர் மீது தாக்குதல்"

    சீர்காழியில் அ.தி.மு.க பிரமுகரை தாக்கிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே உள்ள சம்பூராயர் கோடங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை. அ.தி.மு.க பிரமுகர். இவர் நேற்று சம்பூராயர் கோடங்குடியில் இருந்து சீர்காழிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நெம்மேலி அருகே கார் சென்று கொண்டிருந்த போது கையில் உருட்டு கட்டை, கற்ளை வைத்து கொண்டு 3 நபர்கள் காரை வழிமறித்தனர். 

    உடனே அதிர்ச்சியுடன் ராஜதுரை காரை நிறுத்தினார். தொடர்ந்து 3 நபர்களும் கையில் வைத்திருந்த உருட்டு கட்டை மற்றும் கற்கலால் கார் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் ராஜதுரைக்கு காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் 3 பேரை தேடி வருகின்றனர்.

    ×